Tamil Nadu

Ariyalur

RBT/CC/144/2022

M.Manoharan - Complainant(s)

Versus

The Government Meternity Care Hospital., - Opp.Party(s)

C.Saravanan

02 Feb 2023

ORDER

                      புகார்  கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 13-09-2017 (Chennai South)

                     உத்தரவு  பிறப்பித்த  நாள்   : 02-02-2023

 

மாவட்ட  நுகர்வோர்  குறைதீர்  ஆணையம், அரியலூர்.

முன்னிலை  : திரு   டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி.  தலைவர்.

திரு  என்.பாலு.பி..ஏ.பி.எல்.,      உறுப்பினர்.  I 

திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II

 

நுகர்வோர் புகார்  எண் (RBT CC No):  144/2022.

 

01.       திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம், கூவம் அஞ்சல், கூவம் புதிய காலனி, இலக்கம் 77-ல் வசிக்கும் மனோகரன்

 

02.       திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம், கூவம் அஞ்சல், கூவம் புதிய காலனி, இலக்கம் 77-ல் வசிக்கும் ஜமுனா என்ற சரிதா       

                                                                                                 -முறையீட்டாளர்கள்

 

01.       சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை, அதன் தலைமை மருத்துவர் மூலம்                              

 

02.       திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம், மருத்துவமனை சாலையிலுள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையம் (The Gvernment Upgraded Primary health Centre),  அதன் மருத்துவ அதிகாரி மருத்துவர் டி அருள்செல்வி மூலம் 

 

03.       திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம், மருத்துவமனை சாலை, ஆர் டி இ காம்ப்ளக்ஸில் இருக்கும் மருத்துவர் டி அருள்செல்வி                                                                                                                                              - எதிர் தரப்பினர்கள்

 

 

01        இந்த  புகாரில் முறையீட்டாளருக்கு திருவாளர்கள் சி சரவணன்மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும்  எதிர்தரப்பினர்களுக்கு அரசு வழக்கறிஞர் திரு ஆர். ரவிச்சந்திரன் முன்னிலையாகியும்   இருந்த நிலையில் இந்த ஆணையத்தின்  முன்பாக      18-01-2023 அன்று இறுதியாக  விசாரணை  ஏற்பட்டு இது நாள்  வரையில்   இந்த ஆணையத்தின்    பரிசீலனையில்  இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம்-01, அவரது சான்றாவணங்கள் – 11, முதலாம், இரண்டாம் எதிர் தரப்பினரின் பதில் உரை, மூன்றாம் எதிர் தரப்பினரின் பதில் உரை, முதலாம், இரண்டாம் எதிர் தரப்பினரின் சாட்சியம்-01, சான்றாவணம் – 01, மூன்றாம் எதிர் தரப்பினரின் சாட்சியம்-01,  மற்றும் வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும்  இன்று  இவ்வாணையம்   வழங்கும் 

 

உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை

 

02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர்கள் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, முதலாம் எதிர்தரப்பினர் தங்களுக்கு 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர்  தரப்பினர்கள் தங்களுக்கு ரூ 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மூன்றாம் எதிர்தரப்பினர் தாம் செலுத்திய கட்டணம் ரூ 15 ஆயிரத்தை தங்களுக்கு திருப்பி வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை எதிர்  தரப்பினர்கள் தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்களையும் வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர்கள் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்கள்.

 

 

 

 

 

  • ர்கள் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:

 

03.       தாங்கள் கணவன், மனைவி என்றும் தங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது என்றும் இரண்டாவது குழந்தை கடந்த 28-03-2014 ஆம் தேதியில் முதலாம் எதிர் தரப்பினரின் மருத்துவமனையில் பிறந்தது என்றும் குழந்தை பிறந்த போது முதலாம் எதிர்தரப்பினர் தங்களுக்கு தெரிவிக்காமல் எழுதப்படாத தாள்களில் கையொப்பம் பெற்றுக் கொண்டு தற்காலிக கருத்தடை சாதனமான காப்பர்-டி – ஐ இரண்டாம் முறையீட்டாளர் உடலில் பொருத்தி விட்டார்கள் என்றும் தங்களுக்கு இன்னும் ஒரு குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில் முதலாம் எதிர்தரப்பினர் இவ்வாறு செய்ததால் வேறு வழியின்றி அதனை தாங்கள் ஏற்றுக் கொண்டோம் என்றும் பிறகு இரண்டாம் முறையீட்டாளருக்கு கீழ் வயிற்றுப் பகுதியில் வலி, மாதவிலக்கு காலங்களில் தாங்கமுடியாத வலி, முறையற்ற மாதவிலக்கு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்பட்டது என்றும் இதனால் மூன்றாம் எதிர் தரப்பினர் நடத்திவந்த தனி மருத்துவமனையில் மூன்றாம் எதிர் தரப்பினரிடம் சிகிச்சைக்கு சென்றபோது காப்பர் டி பொருத்தபட்டால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்றும் சிறிது காலத்தில் சரியாகி விடும் என்றும் தெரிவித்து   சில மருந்துகளை உட்கொள்ளுமாறு பரிந்துரைத்தார் என்றும் அவரது அறிவுரைப்படி இரண்டாம் முறையீட்டாளர் மருந்துகளை உட்கொண்டார் என்றும் முறையீட்டாளர்கள் தமது புகாரில் தெரிவித்துள்ளார்கள்.

 

04.       மூன்றாம் தரப்பினரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொண்டும் இரண்டாம் முறையீட்டாளரின் உடல்நிலை பிரச்சனையில் முன்னேற்றம் இல்லாததால் கடந்த 2016 ஆம் ஆண்டு   பரிசோதனை செய்து பார்த்தபோது காப்பர்-டி முறையாக பொருத்தப்படவில்லை என்பதும் கருப்பையில் தவறான நிலையில் பொருத்தப்பட்டுள்ளது என்பது தங்களுக்கு தெரியவந்தது என்றும் பின்பு மூன்றாம் எதிர் தரப்பினரை சந்தித்து காப்பர்-டி சாதனத்தை அகற்றிவிட சிகிச்சை வழங்குமாறு கேட்டபோது காப்பர் டி அகற்ற வேண்டுமெனில் நிரந்தர கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார் என்றும் இதற்கு தங்களுக்கு விருப்பம் இல்லை என்ற போதிலும் இதனை தவிர வேறு வழி இல்லை என்று அவர்   தெரிவித்ததால் அதற்கு தாங்கள் ஒப்புக் கொண்டோம் என்றும் மூன்றாம் எதிர்தரப்பினர் இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள இரண்டும் எதிர் தரப்பினரின் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார் என்றும் இவ்வாறு அனுமதிக்கப்பட்ட பின்னர் 03-09-2015 ஆம் தேதியன்று மூன்றாம் எதிர்தரப்பினர் இரண்டாம் எதிர் தரப்பினரின் மருத்துவமனையில் இரண்டாம் முறையீட்டாளருக்கு காப்பர் டி யை அகற்றுதல் மற்றும் நிரந்தர கருத்தடை அறுவைச் சிகிச்சையை செய்தார் என்றும் இதன் பின்பு மூன்றாம் எதிர்தரப்பினர் காப்பர் டி நீக்கப்பட்டுவிட்டது என்றும் நல்ல முறையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு விட்டது என்றும் தங்களுக்கு தெரிவித்தார் என்றும் முறையீட்டாளர்கள் தமது புகாரில் தெரிவித்துள்ளார்கள்.

 

05.       மேற்கண்ட அறுவை சிகிச்சைகளுக்கு பின்னரும் இரண்டாம் முறையீட்டாளரின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் தொடர்ந்து பிரச்சனை  இருந்து வந்தது என்றும் இதன் காரணமாக காஞ்சிபுரம், தண்டலம் பகுதியிலுள்ள சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாங்கள் சிகிச்சைக்கு சென்றோம் என்றும் அப்போது காப்பர் டி இரண்டாம் முறையீட்டாளர் உடலிலிருந்து அகற்றப்படாமல் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது என்றும் பின்னர் 05-01-2017 ஆம் தேதியில் சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் காப்பர் டி நீக்கப்பட்டது என்றும் அதற்கு தங்களுக்கு பெரிய மிகுந்த செலவு ஏற்பட்டது என்றும் முறையீட்டாளர்கள் தமது புகாரில் தெரிவித்துள்ளார்கள்.

 

06.       தங்களுக்கு தெரிவிக்காமல் இரண்டாம் முறையீட்டாளர் உடலில் காப்பர் டி சாதனத்தை முதலாம் எதிர்தரப்பினர் பொருத்தினார்  என்றும் அவ்வாறு அதனை பொருத்திய போது முறையற்ற வகையில் பொருத்தி விட்டார்  என்றும் இதன் காரணமாக தங்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது என்றும் இவ்வாறு முதலாம் எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் காப்பர்-டி சாதனத்தை அகற்ற கேட்டபோது கருத்தடை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்கள் என்றும் இதற்கு ஒப்புக் கொண்டு மூன்றாம் எதிர் தரப்பினரின் ஆலோசனையின்படி இரண்டாம் எதிர் தரப்பினரின் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைச்சிகிச்சை நடந்ததில் காப்பர்-டி சாதனத்தை அவர்கள் அகற்றவில்லை   என்றும் இவ்வாறான அலட்சியமான நடவடிக்கையால் தங்களுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டது என்றும் இத்தகைய முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களின் செய்கைகள் சேவை குறைபாடு என்றும் எதிர் தரப்பினர்களின் செய்கைகள் காரணமாக தங்களுக்கு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இது குறித்து எதிர் தரப்பினர்களுக்கு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் இன்னும் பிற சங்கதிகளை தெரிவித்தும் முறையீட்டாளர் தமது புகாரை தாக்கல் செய்துள்ளார்.

 

07.       எனவே, முதலாம் எதிர்தரப்பினர் தங்களுக்கு 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர்  தரப்பினர்கள் தங்களுக்கு ரூ 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மூன்றாம் எதிர்தரப்பினர் தாம் செலுத்திய கட்டணம் ரூ 15 ஆயிரத்தை தங்களுக்கு திருப்பி வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை எதிர்  தரப்பினர்கள் தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்களையும் வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர்கள் தமது புகாரில்   கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

 

முதலாம்,  இரண்டாம் எதிர்  தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:

 

08.       புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர்கள் நிரூபிக்க கடமைப்பட்டவர்கள் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் முதலாம், இரண்டாம் எதிர்  தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.

09.       புகார் தனிப்பட்ட தகுதி அடிப்படையில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதால் புகார் நிலைநிற்க தக்கது அல்ல ஏனெனில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் அரசு நிறுவனங்கள் என்றும் தங்களுக்கும் முறையீட்டாளர்களுக்கும் நுகர்வோர் சேவை வழங்குவோர் என்ற உறவு இல்லை என்றும் இரண்டாம் முறையீட்டாளர் முதலாம் எதிர்தரப்பினர் மருத்துவமனையில் கடந்த 28-03-2014 ஆம் தேதியில் சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து  பரிந்துரை கடிதத்துடன் வந்து இரண்டாம் எதிர் தரப்பினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருக்கு சுமார் 8 ஆண்டுகளாக குடல் வால் மருத்துவ பிரச்சினை இருந்து வந்துள்ளது என்றும் முதலாவது  குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளது என்றும் மருத்துவ ஆலோசனைக்கு பின்பு அவசரமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மகப்பேறு குழந்தை பிறந்தது என்றும் அவ்வாறு சிகிச்சை நடைபெற்றபோது தகவல் முறையாக தெரிவிக்கப்பட்டு இரண்டாம் முறையீட்டாளர் உடலில் முறையான வகையில் காப்பர் டி சாதனம் பொருத்தப்பட்டது என்றும் பின்னர் காப்பர் டி சாதனம் சரியான நிலையில் உள்ளது என்பதற்காக ஸ்கேன் மூலம் சோதனை செய்து நல்ல உடல் நிலையுடன் மருத்துவமனையில் இருந்து இரண்டாம் முறையீட்டாளர் விடுவிக்கப்பட்டார் என்றும்  முதலாம் எதிர்தரப்பின ருக்கு 28-03-2014 ஆம் தேதியில் சிகிச்சை அளித்து காப்பர்-டி பொருத்தி  உள்ளார் என்பதால் கால வரையறை உரிய கால வரையறைக்குள் புகார் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் மேற்கண்ட காரணங்களினால் முதலாம் எதிர் தரப்பினர் மீதான புகார் சட்டப்படி சரியல்ல என்றும் முதலாம், இரண்டாம் எதிர்  தரப்பினர்கள் தமது பதிலை தாக்கல் செய்துள்ளார்கள்.

 

10.       இரண்டாம் எதிர் தரப்பினர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானவை அல்ல என்றும் இரண்டாம் முறையீட்டாளர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக இரண்டாம் எதிர் தரப்பினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர் சுந்தரி கோபாலன் என்பவரால் அறுவை சிகிச்சை முறையாக செய்யப்பட்டுள்ளது என்றும் தாங்கள் முறையீட்டாளருக்கு சரியான சிகிச்சை வழங்கியுள்ளோம் என்றும் சேவைக் குறைபாடு எதனையும் புரியவில்லை என்றும் இதனால் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இன்னும் பிற சங்கதிகளை தெரிவித்தும் முதலாம், இரண்டாம் எதிர்  தரப்பினர்கள் தமது பதிலை தாக்கல் செய்துள்ளார்கள்.

 

மூன்றாம் எதிர்  தரப்பினர்  தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:

 

11.       புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர்கள் நிரூபிக்க கடமைப்பட்டவர்கள் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் மூன்றாம் எதிர்  தரப்பினர் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.

 

12.       புகார் தனிப்பட்ட தகுதி அடிப்படையில் மூன்றாம் எதிர் தரப்பினர்  மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதால் புகார் நிலைநிற்க தக்கது அல்ல என்றும் தங்களுக்கும் முறையீட்டாளர்களுக்கும் நுகர்வோர் சேவை வழங்குவோர் என்ற உறவு இல்லை என்றும் இரண்டாம் முறையீட்டாளர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக இரண்டாம் எதிர் தரப்பினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர் சுந்தரி கோபாலன் என்பவரால் அறுவை சிகிச்சை முறையாக செய்யப்பட்டுள்ளது என்றும் தாம் மேற்படி அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளவில்லை என்றும் இன்னும் பிற சங்கதிகளை தெரிவித்தும் மூன்றாம் எதிர்  தரப்பினர் தமது பதிலை தாக்கல் செய்துள்ளார்.

 

13.  தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:

 

            1)         முறையீட்டாளர்  கூறுவது  போல்  எதிர்தரப்பினர்கள்   சேவை குறைபாடு  புரிந்து உள்ளாரா?

 

            2)         எதிர்தரப்பினர்கள்   சேவை குறைபாடு  புரிந்துள்ளார்கள் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா?  ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?

 

            3)         இம் முறையீட்டாளர்  பெற தக்க இதர பரிகாரங்கள்  என்ன?

 

எழு வினா எண் – 1

14.       முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளபடி இரண்டாம் முறையீட்டாளர் முதலாம் எதிர்தரப்பினர் மருத்துவமனையில் கடந்த 28-03-2014 ஆம் தேதியில்   இரண்டாம் எதிர் தரப்பினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும்   இரண்டாம் எதிர் தரப்பினர் மருத்துவமனையில் இரண்டாம் முறையீட்டாளர் உடலில் முறையான வகையில் காப்பர் டி சாதனம் பொருத்தப்பட்டது என்றும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதிலில் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.  முதலாம் எதிர்தரப்பினர் தாக்கல் செய்துள்ள சான்று ஆவணத்தில் காப்பர் டி பொருத்துவதற்கு முறையீட்டாளர்கள் தரப்பில் சம்மதம் தெரிவித்து கையொப்பம் செய்த படிவம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தகவல் தெரிவிக்காமல் முதலாம் எதிர்தரப்பினர் காப்பர்-டி சாதனத்தை இரண்டாம் முறையீட்டாளர் உடலில் பொருத்தினார்கள் என்ற குற்றச்சாட்டு தவறானது என்றும் காப்பர் டி சாதனம் முறையற்ற வகையில் பொருத்தப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் முறையீட்டாளர் கள் தரப்பில் இந்த ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்கப்படவில்லை.  இரண்டாம் முறையீட்டாளர் முதலாம் எதிர்தரப்பினர் மருத்துவமனையில் கடந்த 28-03-2014 ஆம் தேதியில்   அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்து காப்பர் டி சாதனம் பொருத்தப்பட்டது என்ற நிலையில் இது குறித்த புகார்  செய்ய கால அவகாசம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே என்ற நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து தான் எவ்வித காலதாமதத்தை மன்னிக்கும்   விண்ணப்பம் இல்லாமல் இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட காரணங்களால் முதலாம் எதிர்தரப்பினர் மீதான புகார் ஏற்புடையது அல்ல என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

15.       முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளபடி இரண்டாம் முறையீட்டாளர் இரண்டாம் எதிர்தரப்பினர் மருத்துவமனையில் கடந்த 03-09-2015 ஆம் தேதியில்  இரண்டாம் எதிர் தரப்பினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும்   அதே நாளில் அவருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை   முறையாக செய்யப்பட்டுள்ளது என்றும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்  தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதிலில் ஒப்புக் கொண்டுள்ளார்கள். 

 

16.       தாங்கள் இரண்டாம் எதிர் தரப்பினர் மருத்துவமனையில் காப்பர் டி சாதனத்தை நீக்குவதற்கும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கும்   உள்நோயாளியாக சேர்க்கை பெற்றோம் என முறையீட்டாளர்கள் கூறும் நிலையில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்  தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதிலில் இரண்டாம் எதிர் தரப்பினர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தபோது தற்காலிக கருத்தடை சாதனமான காப்பர்-டி நீக்கப்பட்டதா என்பது குறித்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் ஒருவருக்கு நிரந்தர கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் போது தற்காலிக கருத்தடை சாதனம் அறுவை சிகிச்சை செய்து கொள்வோரின் உடலில் இருக்க வேண்டிய அவசியமில்லை.  மேலும் இரண்டாம் எதிர்  தரப்பினர் மேற்கொண்ட அறுவைச் சிகிச்சையின் போது காப்பர்-டி சாதனம் நீக்கப்படவில்லை என்பதற்கு ஆதாரமாக முறையீட்டாளர்கள் தாக்கல் செய்துள்ள 4 ஆம் சான்றாவணம் உள்ளது. இதனை முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் தங்கள் உரையில் ஒப்புக் கொண்டுள்ளார்கள். இந்நிலையில்  இரண்டாம் எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. 

 

17.       அரசு மருத்துவமனைகளில் கட்டணம் இல்லாமல் மருத்துவ சேவை வழங்குவதோடு சில சேவைகளை புரிய கட்டணம் பெற்றுக்கொண்டு மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. ஆனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் (இரண்டாம் எதிர் தரப்பினர்) பணம் பெற்றுக் கொண்டு சேவை வழங்கும் பணி எதனையும் செய்வதில்லை என்று இந்த ஆணையம் கருதுகிறது. அவ்வாறு எத்தகைய பணிகளையும் செய்வதாக முறையீட்டாளர்கள் தரப்பில் இந்த ஆணையத்தின் முன்பு தெரிவிக்கவும் அதை நிரூபிக்க போதிய ஆதாரங்களையும் அளிக்கவில்லை.  இந்நிலையில் முறையீட்டாளர்கள் இரண்டாம் எதிர் தரப்பினரின் நுகர்வோர் என்று வரையறுக்க இயலாது என்றும் இதனால் கேட்கும் பரிகாரம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி கிடைக்க தக்கது அல்ல என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது

 

18.       மூன்றாம் எதிர்தரப்பினர் தங்களிடம் மருத்துவ சிகிச்சைக்காக பெற்ற கட்டணம் ரூ 15 ஆயிரத்தை தங்களுக்கு திருப்பி தர வேண்டும் என்று முறையீட்டாளர்கள் தங்கள் புகாரில் கூறி உள்ளார்கள் கேட்டுள்ளார்கள் வேறு எந்த பரிகாரத்தையும் அவரிடமிருந்து கோரவில்லை.  ஆனால் அவர்கள் மூன்றாம் எதிர் தரப்பினருக்கு பணம் செலுத்திய அதற்கு ஆதாரமாக எந்த ஆவணங்களையும் இந்த ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்யவில்லை.  இதனால் மூன்றாம் எதிர்தரப்பினர் மீதான புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டியது என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. 

 

எழு வினா எண் – 2 & 3

 

19.       முதலாவது எழு வினாவை தீர்மானிக்கும் போது முறையீட்டாளருக்கு எதிராக முடிவு மேற்கொள்ளப்பட்டதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு எவ்வித இழப்பீடும் வழங்க வேண்டியதில்லை என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.

 

01.       முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.

 

02.       புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 

03.       வேறு எந்த பரிகாரங்களும் இல்லை

 

            இவ்வாணை    சுருக்கெழுத்தாளருக்கு  சொல்ல அவரால்  கணினியில்  தட்டச்சு   செய்து திருத்தப்பட்டு  இந்த  ஆணையத்தில்  இன்று  02-02-2023   ஆம்  நாளன்று பகரப்பட்டது.

                                                                                    தலைவர்.    

 

                                                                                    உறுப்பினர் – I

 

                                                                                    உறுப்பினர்-II.

முறையீட்டாளர்  தரப்பு சான்றாவணங்கள்:

S.No

Date

Description

Note

ம.சா.ஆ.1

28-03-2014

முதலாம் எதிர்தரப்பினர் வழங்கிய மருத்துவ குறிப்புகள்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.2

28-03-2014

இரண்டாம் எதிர்தரப்பினர் வழங்கிய மருத்துவ குறிப்புகள்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.3

-

மூன்றாம் எதிர்தரப்பினர் வழங்கிய மருத்துவ குறிப்புகள்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.4

23-12-2016

ஸ்கேன் அறிக்கை

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.5

-

சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வழங்கிய மருத்துவ குறிப்புகள், ரசீதுகள்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.6

16-02-2017

முதலாம்   எதிர் தரப்பினருக்கு அனுப்பிய வழக்கறிஞர் அறிவிப்பும் ஒப்புதல் அட்டையும்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.7

16-02-2017

இரண்டாம் எதிர் தரப்பினருக்கு அனுப்பிய வழக்கறிஞர் அறிவிப்பும் ஒப்புதல் அட்டையும்

 

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.8

16-02-2017

மூன்றாம் எதிர் தரப்பினருக்கு அனுப்பிய வழக்கறிஞர் அறிவிப்பும் ஒப்புதல் அட்டையும்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.9

04-01-2022

தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி விண்ணப்பம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.10

15-02-2022

தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி மேல்முறையீடு

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.11

21-03-2022

இரண்டாம் எதிர் தரப்பினரின் தகவல் வழங்கிய கடிதம்

ஜெராக்ஸ்

 

எதிர்தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்:

 

S.No

Date

Description

Note

எம.சா.ஆ.1

-

35 பக்கங்கள் கொண்ட மருத்துவ சிகிச்சை குறிப்புகள்

ஜெராக்ஸ்

 

 

முறையீட்டாளர்   தரப்பு  சாட்சி:  திரு மனோகரன்

முதலாம், இரண்டாம் எதிர்தரப்பினர்கள் சாட்சி:  மருத்துவர் டி எஸ் மீனா

மூன்றாம் எதிர்தரப்பினர்  சாட்சி:  மருத்துவர் டி அருள்செல்வி

                                                           

                                                                                    தலைவர்.

           

                                                                                    உறுப்பினர் – I

 

                                                                                    உறுப்பினர்-II.

Consumer Court Lawyer

Best Law Firm for all your Consumer Court related cases.

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!
5.0 (615)

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!

Experties

Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes

Phone Number

7982270319

Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.