Tamil Nadu

Ariyalur

CC/46/2017

A.Ganesan - Complainant(s)

Versus

The Branch manager, SBI, Sripuranthan, - Opp.Party(s)

S.Tamilmani

15 Feb 2023

ORDER

                      புகார்  கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 09-06-2017

                      உத்தரவு  பிறப்பித்த  நாள்   : 15-02-2023  

 

மாவட்ட  நுகர்வோர்  குறைதீர்  ஆணையம்,அரியலூர்.

முன்னிலை  : திரு   டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி.  தலைவர்.

திரு  என்.பாலு.பி..ஏ.பி.எல்.,      உறுப்பினர்.  I 

திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II

 

நுகர்வோர் புகார்  எண்:  46/2017.

 

            அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஸ்ரீ புரந்தான் அஞ்சல், ஆரண்கோட்டை கிராமத்தில் வசிக்கும் அழகப்ப உடையார் மகன் கணேசன் (இறப்பு)-1 மேற்படி முகவரியில் வசிக்கும் கணேசன் மகன் நாகராஜன்-2                                                                      -முறையீட்டாளர்கள்

 

            அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம்,  ஸ்ரீ புரந்தான் அஞ்சல்,  கிராமத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர்

                                                                                                - எதிர் தரப்பினர்

 

01        இந்த  புகாரில் முறையீட்டாளர்களுக்கு திரு டி செந்தில் ராஜா, வழக்கறிஞர்  முன்னிலையாகியும்   எதிர் தரப்பினருக்கு திரு  டி ஏ பி செந்தில்குமார், வழக்கறிஞர்  முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின்  முன்பாக      30-01-2023 அன்று இறுதியாக  விசாரணை  ஏற்பட்டு இது நாள்  வரையில்   இந்த ஆணையத்தின்    பரிசீலனையில்  இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம்-1, சான்றாவணங்கள் – 6,  எதிர் தரப்பினரின் பதிலுரை, அவரது சாட்சியம் -1 மற்றும் இரு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும்  இன்று  இவ்வாணையம்   வழங்கும் 

 

உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை

02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்  மீது புகார் தாக்கல் செய்து, தங்கள் தரப்பில் இரண்டு காசோலைகள் மூலம் செலுத்தப்பட்ட பணத்தை தனது வங்கி கணக்கில் பதிவு செய்து கணக்கு புத்தகத்தின் நகலை கணக்கு தொடங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை தமக்கு எதிர்  தரப்பினர் வழங்க வேண்டும் என்றும் தனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கு எதிர்தரப்பினர் தமக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினரின் செய்கையால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ 10,000/- தமக்கு எதிர்தரப்பினர் வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவுத் தொகையாக ரூ 5,000/- தமக்கு எதிர்தரப்பினர் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தனது என கருதும் இதர பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர்   இந்த   ஆணையத்தை அணுகியுள்ளார்.

 

  • கள்தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:

 

03.       எதிர் தரப்பினர் வங்கியில் இறந்துபோன முதலாம் முறையீட்டாளர் என்ற 11552777442 எண்ணில் கடன் கணக்கு வைத்துள்ளார். ஸ்ரீ அம்பிகா சுகர்ஸ்  என்ற நிறுவனம் அவருக்கு   இரண்டு காசோலைகள் மூலம் ரூ 67,407/- வழங்கி உள்ளது. அதனை எதிர் தரப்பினர் வங்கியில் அவரது கணக்கில் வரவு வைத்து பதிவுசெய்யப்படவில்லை.  இதுகுறித்து அவர் மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் அனுப்பியும் எதிர் தரப்பினருக்கு வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு அனுப்பியும் எவ்வித பயனும் ஏற்படவில்லை. எதிர் தரப்பினரின் இத்தகைய செய்கைகள் சேவை குறைபாடு என்றும் எதிர் தரப்பினரின் செய்கையால் பெருத்த இழப்பு ஏற்பட்டது என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

04.       எனவே, தங்கள் தரப்பில் இரண்டு காசோலைகள் மூலம் செலுத்தப்பட்ட பணத்தை தனது வங்கி கணக்கில் பதிவு செய்து கணக்கு புத்தகத்தின் நகலை கணக்கு தொடங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை தமக்கு எதிர்  தரப்பினர் வழங்க வேண்டும் என்றும் தனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கு எதிர்தரப்பினர் தமக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினரின் செய்கையால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ 10,000/- தமக்கு எதிர்தரப்பினர் வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவுத் தொகையாக ரூ 5,000/- தமக்கு எதிர்தரப்பினர் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தனது என கருதும் இதர பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

எதிர்  தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:

 

05.       புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர்கள் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் எதிர்  தரப்பினர் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.

 

06.       முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல முதலாம் முறையீட்டாளர் தமது வாடிக்கையாளர் என்றும் அம்பிகா சுகர்ஸ் என்ற நிறுவனம் அவரது கணக்கில் வரவு வைக்க இரண்டு காசோலைகளை எங்களது வங்கிக்கு அனுப்பினார்கள் என்பதற்கு ஆதாரமாக மேற்படி நிறுவனம்   வழங்கிய கடிதத்தைத் தவிர வேறு எந்த ஆதாரங்களையும் முறையீட்டாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யவில்லை என்றும் மேற்படி நிறுவனத்தை இவ்வழக்கில் ஒரு தரப்பினராக சேர்க்கவில்லை என்றும் மேற்படி காசோலைகள் எங்களது வங்கியில் வசூலுக்கு தாக்கல் செய்யப்பட்டது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் சொல்லப்படும் இரண்டு காசோலைகளும் 2017 ஆம் ஆண்டு தேதியிட்டு   வழங்கப்பட்டவை என்பதால் சுமார் பத்து ஆண்டுகள் கழித்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய கால வரையறையை கடந்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் தங்கள் தரப்பில் எவ்வித தேவை குறைபாடும் ஏற்படவில்லை என்றும் இரண்டாம் முறையீட்டாளர் இந்த வழக்கை தொடர தகுதி இல்லை என்றும் இதனால் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற விவரங்களை தெரிவித்தும் எதிர்  தரப்பினர்  தங்கள் பதில்உரையை தாக்கல் செய்துள்ளார்கள்.

 

 07.  தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:

 

1)         முதலாம் முறையீட்டாளர் இறந்துவிட்ட நிலையில் முதலாம் முறையீட்டாளர் தாக்கல் செய்த இந்த புகாரை தொடர்ந்து நடத்த அவரது வாரிசான இரண்டாம் முறையீட்டாள ருக்கு தகுதி உள்ளதா?

 

2)         சட்டப்படியான கால வரையறை கடந்து இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?

 

3)         முறையீட்டாளர்  தரப்பில் கூறுவது  போல்  எதிர்தரப்பினர்    சேவை   குறைபாடு   புரிந்து உள்ளாரா?  ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?

  

4)         இம் முறையீட்டாளர்  பெற தக்க இதர பரிகாரங்கள்  என்ன?

 

எழு வினா எண் – 1

 

08.       முதலாம் முறையீட்டாளர் இறந்துவிட்ட நிலையில் முதலாம் முறையீட்டாளர் தாக்கல் செய்த இந்த புகாரை தொடர்ந்து நடத்த அவரது வாரிசான இரண்டாம் முறையீட்டாளருக்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 பிரிவு 38 (12) –ன்படி தகுதி உள்ளது என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

           

 

 

எழு வினா எண் – 2

 

09.       முதலாம் முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல என்ற 204345, 204369 எண்கள் கொண்ட இரண்டு காசோலைகள் முறையே 25-09-2007, 02-11-2007 தேதியிட்டு முறையே ரூ 4,713/-, ரூ 62,694/- தொகையை முதலாம் முறையீட்டாளர் பெயரில் உள்ள கணக்கில் வரவு வைக்க எதிர் தரப்பினருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற விபரம் கொண்ட கடிதம் முறையீட்டாளர்கள் தரப்பில் முதலாவது சான்று ஆவணமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்தத் தொகை தமது கணக்கில் வரவு வைக்கப்பட வில்லை என்ற பிரச்சினையை முதலாம் முறையீட்டாளர்   எழுப்பி நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி 01-11-2009 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்திருக்க வேண்டும்.  ஆனால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் வரையறுத்துள்ள காலக்கெடுவுக்குள்   உரிய காலத்தில் இந்த புகார் தாக்கல் செய்யவில்லை என்றும் இதனால் இந்த புகார் நிலைநிற்க தக்கதல்ல என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

எழு வினா எண் – 3

 

10.       முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல எதிர்தரப்பினர்களின் வங்கியில் கணக்கு வைத்துள்ளது  எதிர்தரப்பினர் சார்பில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதால் முறையீட்டாளர் எதிர்தரப்பினர்களின் நுகர்வோர் ஆவார்.

 

11.       முதலாம் முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல என்ற 204345, 204369 எண்கள் கொண்ட இரண்டு காசோலைகள் முறையே 25-09-2007, 02-11-2007 தேதியிட்டு முறையே ரூ 4,713/-, ரூ 62,694/- தொகையை முதலாம் முறையீட்டாளர் பெயரில் உள்ள கணக்கில் வரவு வைக்க எதிர் தரப்பினருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற விபரம் கொண்ட கடிதம் முறையீட்டாளர்கள் தரப்பில் முதலாவது சான்று ஆவணமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

 

 

12.       மேற்படி முதலாவது சான்று ஆவணமான கடிதத்தில் சொல்லப்பட்டுள்ள காசோலைகள் எதிர் தரப்பினர் வங்கியில் தாக்கல் செய்யப்பட்டது என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது. அவற்றை நிரூபிக்க மேற்படி காசோலைகளை வழங்கிய நிறுவனம் இந்த வழக்கில் தரப்பினராக சேர்க்கப்படவில்லை என்றாலும் கூட குறைந்தபட்சம் நிறுவனத்தின் சார்பில் அலுவலர்களை அழைத்து ஆணையத்தின் முன்பு சாட்சியமளிக்க எவ்வித நடவடிக்கைகளையும் முறையீட்டாளர் தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை.  இதனால் புகாரில் சொல்லப்பட்ட காசோலைகள் எதிர்த் தரப்பினர் வங்கியில் வசூலுக்கு தாக்கல் செய்யப்பட்டது எவ்வித ஆதாரமும் கிடையாது என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. ஒருவேளை வசூலுக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தாலும் கூட அந்த காசோலைகள் ஏதேனும்  காரணங்களால்  மதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படும் வாய்ப்புகள் உள்ள நிலையில் எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்தார் என்று கூற இயலாது என்ற முடிவை மேற்கொள்ள இயலாது. 

 

எழு வினா எண் – 3 & 4

 

13.       இரண்டாம் மற்றும் மூன்றாம் எழு வினாக்களை தீர்மானிக்கும் போது முறையீட்டாளருக்கு எதிராக முடிவு மேற்கொள்ளப்பட்டதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு எவ்வித இழப்பீடும் வழங்க வேண்டியதில்லை என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும்   இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும்வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.

 

01.       முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.

 

02.       புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

03.       வேறு எந்த பரிகாரங்களும் இல்லை

 

            இவ்வாணை    சுருக்கெழுத்தாளருக்கு  சொல்ல அவரால்  கணினியில்  தட்டச்சு   செய்து திருத்தப்பட்டு  இந்த  ஆணையத்தில்  இன்று  15-02-2023   ஆம்  நாளன்று பகரப்பட்டது.

                                                                                    தலைவர்.    

                       

                                                                                    உறுப்பினர் – I

 

                                                                                    உறுப்பினர்-II

 

முறையீட்டாளர்கள்  தரப்பு சான்றாவணங்கள்:

S.No

Date

Description

Note

ம.சா.ஆ.1

16-10-2015

அம்பிகா சுகர்ஸ்   எதிர் தரப்பினருக்கு எழுதிய கடிதம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.2

11-06-2012

மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய புகார்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.3

26-12-2011

புகார்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.4

20-02-2012

புகார்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.5

09-01-2017

வழக்கறிஞர் அறிவிப்பு

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.6

25-02-2017

பதில் அறிவிப்பு

ஜெராக்ஸ்

 

எதிர்தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை

முறையீட்டாளர்   தரப்பு  சாட்சி:  திரு நாகராஜன்

எதிர்தரப்பினர்கள் சாட்சி: 1                                                                            

                                                                                    தலைவர்.

           

                                                                                    உறுப்பினர் – I

 

                                                                                    உறுப்பினர்-II.

Consumer Court Lawyer

Best Law Firm for all your Consumer Court related cases.

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!
5.0 (615)

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!

Experties

Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes

Phone Number

7982270319

Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.